Posts

உபதேச உண்மை - எழுத்து பிரித்த வடிவில்

  உபதேச உண்மை திருச்சிற்றம்பலம்   கண்ணே கண்மணியே  கருத்தே கருத்தின் கனிவே  விண்ணே விண்ணிறைவே  சிவமே தனி மெய்ப்பொருளே  தண்ணேர் ஒண் மதியே எனைத் தந்த தயாநிதியே  உண்ணேர்  உள் ஒளியே  எனக்கு உ ண்மை உரைத்தருளே   வளியே வெண்ணெருப்பே  குளிர் மாமதியே  கனலே வெளியே மெய்ப்பொருளே  பொருள் மேவிய மேனிலையே  அளியே அற்புதமே  அமுதே அறிவே அரசே  ஒளியே உத்தமனே எனக்கு உ ண்மை உரைத்தருளே   அன்பே என்னரசே  திரு அம்பலத்து ஆர் அமுதே  என்பே உள்ளுருகக்  கலந்து என்னுள் இருந்தவனே இன்பே என்னறிவே  பரமே சிவமே யெனவே உன் பேர் ஓதுகின்றேன் எனக்கு உ ண்மை உரைத்தருளே.   தனையா வென்று அழைத்தே அருட் சத்தி அளித்தவனே அணையை அப்பனுமாய் எனக்கு காரியம் ஆனவனே  இனையாத என்னையும் மேல் நிலை ஏற்றுவித்து ஆண்டவனே உனையான் ஏத்துகின்றேன் எனக்கு உ ண்மை உரைத்தருளே.   துப்பார் செஞ்சுடரே  அருட்சோதி சுகக்கடலே அப்பா என்னரசே  திரு அம்பலத்து ஆர் அமுதே  இப்பாரிற் பசிக்கே தந்த  இ...

திருக்கதவந் திறத்தல் - எழுத்து பிரித்த வடிவில்

திருசிற்றம்பலம்   திருக்கதவம் திறவாயோ  திரைகளெலாம் தவிர்த்தே திருவருளாம் பெருஞ்சோதித்  திரு உருக் காட்டாயோ       உருக்கி அமுதம் ஊறி எடுத்து  உடம்பு உயிரோடு உளமும்  ஒளிமயமே ஆக்குற  மெய் உணர்ச்சி அருளாயோ  கருக்கருதாத்த தனி வடிவோய்  நின்னை என்னுட் கலந்தே  கங்குல் பகல் இன்றி  என்றும் களித்திடச் செய்யாயோ  செருகருத்தாதவருக்கு  அருளும் சித்தி புரத்தரசே சித்தசிகாமணியே என் திரு நட நாயகனே.   மணிக்கதவம் திறவாயோ  மறைப்பையெலாம் தவிர்த்தே  மாற்றறியாப் பொன்னே  நின் வடிவது காட்டாயோ  கணிக்கறியாப் பெரு நிலையில்  என்னொடு நீ கலந்தே  கரை கடந்த பெரும் போகம்  கண்டிடச் செய்யாயோ  தணிக்கறியாக் காதல்மிகப்  பெருகுகின்றது அரசே  தாங்க முடியாது இனி  என் தனித் தலைமைப் பதியே  திணிக் கலை ஆதிய எல்லாம்   பணிக்கவல்ல சிவமே சித்தசிகாமணியே என் திரு நட நாயகனே.   உரை கடந்த திரு வருட்  பேரொளி வடிவைக் கலந்தே  உவட்டாத பெரும் போகம்  ஓங்கியுறும் ப...

சுத்த சன்மார்க்க வேண்டுகோள் - எழுத்து பிரித்த வடிவில்

  திருசிற்றம்பலம்   அப்பா நான் வேண்டுதல் கேட்டு  அருள் புரிதல் வேண்டும்   ஆருயிர் கட்கு எல்லாம்  நான் அன்பு செயல் வேண்டும்  எப்பாரும் எப்பதமும் எங்கணும்  நான் சென்றே எந்தை நினது அருட் புகழை  இயம்பு இடல் வேண்டும்  செப்பாத மேனிலை மேல்  சுத்த சிவ மார்க்கம்  திகழ்ந்து ஓங்க அருட்சோதி  செலுத்தி இடல் வேண்டும்  தப்பு ஏது நான் செயினும்  நீ பொறுத்தல் வேண்டும் தலைவ நினைப் பிரியாத நிலைமையும் வேண்டுவனே.   ஐயா நான் வேண்டுதல் கேட்டு  அருள் புரிதல் வேண்டும்  அடி முடி கண்ட நாளும்  அனுபவித்தல் வேண்டும்  பொய்யாத வாய்மைகளே புகன்று இடுதல் வேண்டும்  புகன்றபடி புகன்றபடி  புரிந்திடுதல் வேண்டும்  எய்யாத அருட்சோதி  என் கையுறல் வேண்டும்  இறந்த உயிர் தமை மீட்டும்  எழுப்பியிடல் வேண்டும்  நையாத வண்ணம் உயிர்  காத்திடுதல் வேண்டும் நாயக நின்தனைப்  பிரியாத  உறுதலும் வேண்டுவனே.   அண்ணா நான் வேண்டுதல் கேட்டு  அருள் புரிதல் வேண்டும்  அழியா...